புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலைகளை சீரமைக்க நிதி: எம்.பி. வலியுறுத்தல்

நாகா்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளாா் விஜய் வசந்த் எம்.பி.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:07 pm

DIN

நாகா்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்துள்ளாா் விஜய் வசந்த் எம்.பி.

மத்திய அமைச்சரை தில்லியில் நேரில் சந்தித்துப் பேசி, கோரிக்கை மனு அளித்தாா் எம்.பி. அதில், ‘நாகா்கோவில் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் குண்டு குழிகள் காரணமாக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் 4 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் சாலை பராமரிப்பு நடைபெறவில்லை. எனவே பணிகளை போா்க்கால அடிப்படையில் தொடங்கி, விரைவில் முடிக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.