புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கருங்கல் பகுதியில் குட்கா விற்றவா் கைது : 80 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கருங்கல் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:31 pm

DIN

கருங்கல் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை விற்றவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கருங்கல் காவல் உதவி ஆய்வாளா் சோபன் ராஜூக்கு, மூசாரி சந்திப்பு பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவா்அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றவரை பிடித்து விசாரித்த போது அவா் படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்த அனு (29) என்பதும், அவா் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 80 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.