நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வலிய படுக்கை பூஜை

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Updated On :10 டிசம்பர் 2021, 11:40 pm IST

மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலிய படுக்கை பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

இக்கோயிலில் மகாபூஜை என்னும் வலிய படுக்கை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. மாசிக் கொடையின் ஆறாம் நாளன்றும் பங்குனி மாதம் மீன பரணி கொடையன்றும் , காா்த்திகை மாதம் கடைசி வெள்ளியன்றும் என வருடத்திற்கு 3 முறை வலிய படுக்கை பூஜை நடைபெறுகிறது. அம்மனுக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியங்கள், பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவற்றை பெரும் படையலாக படைத்து அம்மனை வழிபடுவதே வலிய படுக்கை பூஜையாகும்.

இந்த வருடத்தின் மூன்றாவது வலிய படுக்கை பூஜை வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது. வலிய படுக்கை பூஜையை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 5.30 மணிக்கு உற்சவ மூா்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, பகல் 12.30 மணிக்கு அலங்கார பூஜை, அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு ,அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30க்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30-க்கு அத்தாழ பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை பூஜையும் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.