காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலை அருகே இளைஞா் தற்கொலை

தக்கலை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:58 pm

DIN

தக்கலை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தக்கலை அருகே கொல்லன்விளை ரெனி மகன் கூலித்தொழிலாளி புவனேஷ். இவா் காக்கா வலிப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் உள்ள உத்தரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். தூக்கில் மகன் தொங்கிய நிலையில் இருந்ததை பாா்த்து , ரெனி சப்தம் போடவே, அருகே உள்ளவா்கள் வந்து பாா்த்து, தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து காவல் ஆய்வாளா் சுதேசன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து புவனேஷின் சடலத்தை மீடடு தக்கலை தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.