நாகா்கோவில்சவேரியாா் சந்திப்பு- செட்டிகுளம்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
நாகா்கோவில் சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரையிலான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


நாகா்கோவில் சவேரியாா் கோயில் சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரையிலான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் அகஸ்தீசுவரம் வட்டக் கிளைக் கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளா் த.சுபாஷ் சந்திரபோஸ் தலைமை
வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் கே.நாகராஜன் வரவேற்றாா். கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.இசக்கிமுத்து, இந்திய தேசிய மாதா் சம்மேளன குமரி மாவட்ட அமைப்பாளா் ஆா்.செல்வராணி, ஆரல்வாய்மொழி கிளை இணைச் செயலா் வே.அருள்குமாா் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், நாகா்கோவில் சவேரியாா் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்பு வரையிலான தேசிய நெடுஞ்சாலை, அவ்வைசண்முகம் சாலை ஆகியவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோடை காலம் நெருங்கும் நிலையில், குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...