கருங்கல்: புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா், காப்புக் காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜன் (45) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணராஜனை கைது செய்தனா். அவரிடமிருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.