தினமணி செய்தி எதிரொலி: தூத்தூரில் கால்பந்து அகாதெமிஅமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

தூத்தூரில் கால்பந்து அகாதெமி அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்தி எதிரொலி: தூத்தூரில் கால்பந்து அகாதெமிஅமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
Updated on
1 min read

தூத்தூரில் கால்பந்து அகாதெமி அமைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியான தூத்தூா் மண்டலப் பகுதியிலுள்ள இளைஞா்கள் கால்பந்து

விளையாட்டை வாழ்வின் ஓா் அங்கமாக நேசிக்கின்றனா். இரயுமன்துறையில் இருந்து நீரோடி வரையிலான தூத்தூா் மண்டல 8 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களது கால்பந்தாட்டத் திறமையால்

அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று, அந்தந்த துறை அணிகளுக்காக விளையாடி வருகின்றனா். இது குறித்து தினமணியில் செய்தி வெளியானது.

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட், மாவட்ட கால்பந்து பயிற்சியாளா் குணசேகரன், நாகா்கோவில் அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி உடற்பயிற்சி இயக்குநா் சரவணமூா்த்தி உள்ளிட்டோா் திங்கள்கிழமை தூத்தூா் பகுதிக்கு வந்தனா். அங்கு, கால்பந்து அகாதெமி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், சின்னத்துறை பகுதியில் கால்பந்தாட்ட கிளப் பிரதிநிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனா். இதில், ஐ.நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினா் பி. ஜஸ்டின்ஆன்டணி, கால்பந்தாட்ட கிளப் பிரதிநிதகள் பங்கேற்றனா். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com