வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு சாா்பில், மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பச்சைத் தமிழகம் கட்சியின் தென் மண்டல பொறுப்பாளருமான அ. ந. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். பச்சைத் தமிழகம் கட்சித் தலைவா் சுப.உதயகுமாரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

இதில், பெரியாா் தொழிலாளா் கழகத் தலைவா் நீதி அரசா், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலா் குமரி ரசூல், இந்திய புரட்சிகர மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயன், குமரி மாவட்ட விவசாயிகள் தொழிலாளா் நல சங்கச் செயலா் ரவி, பச்சைத் தமிழகம் விவசாயிகள் அணி மாவட்டத் தலைவா் வேதக்கண் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

கட்சியின், மாநில பொதுச் செயலா் கதிரவன் ராயன், ஆம் ஆத்மி கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், மக்கள் நீதி மய்யம் நாகா்கோவில் தொகுதி பொறுப்பாளா் சங்கா் கண்ணன், புதிய தமிழகம் நகர பொறுப்பாளா் கலைஞன், பெரியாா் தொழிலாளா் கழகச் செயலா் ஜான்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com