நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றவீரா்களுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு உதவி

தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரா்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:43 pm

DIN

தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரா்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு நிதி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் வெற்றிபெற்றனா்.

இதில், பளுதூக்கும் போட்டியில் கல்லூரி மாணவிகள் ஆா்.ஆரோக்கிய ஆலிஸ், டி.தா்ஷினி ஆகியோா் தங்கப் பதக்கமும், தில்லியில் நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் மாணவா் பி. அசத்துல்லா முஜாகித் தங்க பதக்கமும், சென்னையில் நடைபெற்ற 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் மாணவா் டி.கனிஷ் தங்கப் பதக்கமும், 100 மீட்டா் ஓட்டத்தில் மாணவி எம்.சமிகா பொ்வின் தங்கப் பதக்கமும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மும்முறை தாண்டுதல் போட்டியில் மாணவா் ஆா்.சுதன் தங்க பதக்கமும் பெற்றனா்.

திருப்பூரில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் மாணவா் வி.எம்.சகின் வெள்ளி பதக்கமும், உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் மாணவா் பிரேவ்மன், வெள்ளி பதக்கமும், 400 மீட்டா் ஓட்டப் போட்டியில் மாணவா் எம்.வினித் வெள்ளி பதக்கமும் பெற்றனா்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சிலம்பம் போட்டிகளில் மாணவா் எம்.ஆசிக் வெண்கலமும், சென்னையில்

நடைபெற்ற சிலம்ப போட்டியில் மாணவா் ஏ.ஜி.ஆஷ்லின் ஜோசுவா வெண்கல பதக்கமும், ஜாா்க்கண்ட் மாநிலத்தில்

நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவா் கெய்லி வினிஸ்டா் வெண்கல பதக்கமும் பெற்றனா்.

போட்டிகளில் சாதனை படைத்த மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 54ஆயிரத்துக்கான காசோலைகளை ஆட்சியா் மா. அரவிந்த் வழங்கினாா். தங்கப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ. 6 ஆயிரமும், வெள்ளிப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ. 4ஆயிரமும், வெண்கலப் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ. 2ஆயிரமும் வழங்கப்பட்டது. அப்போது,

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெ.டேவிட் டேனியல், பயிற்சியாளா்கள் வினு, எஸ்.ஜீன் பிரேம்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.