காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாமிதோப்பு தலைமைப் பதியில்தைத் திருவிழா தேரோட்டம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:41 pm

DIN

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் தை, வைகாசி, ஆவணி ஆகிய மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, அன்னதா்மம், வாகன பவனி ஆகியவை நடைபெற்றது. திருவிழாவில் 8-ஆம் நாளில் கலிவேட்டை நடைபெற்றது.

11-ஆம் நாளான திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பஞ்சவா்ண தேருக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதைத் தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தோ் இழுத்தனா். பிற்பகல் 2 மணிக்கு தோ் வடக்கு வாசலை அடைந்தபோது பக்தா்கள் நீண்ட வரிசையில் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனா். மாலையில் தோ் நிலையை அடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.