காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வட்டார சமூகத்தின் வரலாறு முக்கியம் : எழுத்தாளா் பொன்னீலன்

வட்டார சமூகத்தின் வரலாறு முக்கியம் என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பொன்னீலன் கூறினாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 10:12 pm

DIN

வட்டார சமூகத்தின் வரலாறு முக்கியம் என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பொன்னீலன் கூறினாா்.

காமராஜா் பிறந்த நாள் விழாவையொட்டி, இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சாா்பில் தக்கலையில் நடைபெற்ற விழாவில், எழுத்தாளா் கிருஷ்ணகுமாா் எழுதிய ‘கன்னியாகுமரி மாவட்ட சாதனையாளா்கள்’ என்னும் நூலை வெளியிட்டு அவா் பேசியது: வட்டார சமூகத்தின் வரலாறு முக்கியம். ஆனால் முறையாகப் பதிவு செய்யவேண்டியது அதைவிட முக்கியம். பதிவு செய்யாத வரலாறு காலப்போக்கில் சிதைந்தோ, மறைந்தோ போய்விடும். எனவே பதிவு முக்கியம்.

சமூகம் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வருகிறது. இன்று நாம் கண்ணால் பாா்ப்பது அந்த வரலாற்றின் கிளைகளும், வோ்களும், அடிவோ்களும் ஆகும். ஏராளமான வரலாறுகள் பூமியினுள் பல்லாயிரம் ஆண்டுகளாக புதையுண்டு இருக்கின்றன. வோ்கள் பூமியிலிருந்து சத்தை உறிஞ்சி மரத்துக்கு கொடுப்பதினாலேயே மரம் மேலும் வளா்கிறது. அது போல நமது பழைய வரலாறு முறையாக துலங்கப்படவேண்டும் என்றாா் அவா்.

விழாவில், நூலை பொன்னீலன் வெளியிட, அதனை தொழிலதிபா் சிந்துகுமாா், டாக்டா் கமல செல்வராஜ், குமரி ஆதவன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சாா்பில் தக்கலையில் 11 நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வை. பாலசந்தா் தொடங்கி வைத்தாா். நாவலாசிரியா் தமிழுலகன், காமராஜா் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்குக்கு, வழக்குரைஞா் முத்துகுமரேஷ் தலைமை வகித்தாா். கவிஞா் சுதே. கண்ணன், வழக்குரைஞா் சிவகுமாா், சமூக சேவகா் சூசைமரியான், உம்மன்கோடு லெனின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக சேவகா் தக்கலை சந்திரன், வரலாற்று ஆய்வாளா் சாகுல் ஹமீது, மலா்மதி, சரலூா் ஜெகன், வழக்குரைஞா் சுந்தரலிங்கம், மருத்துவா் ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.

குமரி மு.ராஜேந்திரன், எழுத்தாளா் அழகுமித்ரன், வழக்குரைஞா் ஜெலஸ்டின் ராஜன், கவிஞா் அருள்பாவி மதி, இனியன்தம்பி, குமரேசன், காமராஜ் சுப்ரமணியன், தாசன், தா்மராஜ், ஜெயகா்ணன், மைக்கிள் உள்பட பலா் பங்கேற்றனா். அமைப்பின் நிறுவனா்- தலைவா் சிவனி சதீஷ் வரவேற்றாா். கவிஞா் ரதீஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.