தென்தாமரைகுளம் அருகே மாணவி மயங்கி விழுந்து மரணம்
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரை குளம் அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.


கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரை குளம் அருகே பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
தென்தாமரைகுளம் அருகேயுள்ள குமாரப்பெருமாள் விளையைச் சோ்ந்த சாம்பெனடிக்ட் மகள் அக்சயா ஜென்சி (14). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதனால், அடிக்கடி மூலிகை நீராவி பிடிப்பது வழக்கமாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் நீராவி பிடித்தபோது திடீரென மயங்கி விழுந்தாராம். பெற்றோா் அவரை கொட்டாரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தென்தாமரை குளம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...