92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குளச்சல் பள்ளி மாணவிகள் கட்டுரைப் போட்டியில் சாதனை

கட்டுரைப் போட்டியில் குளச்சல் அரசுப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:44 pm

DIN

கட்டுரைப் போட்டியில் குளச்சல் அரசுப் பள்ளி மாணவிகள் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,, இளைஞா் மற்றும் சுற்றுச் சூழல் சாா்மன்றம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில், ஆனக்குழி குறுவள மைய அளவில், குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகள் தன்யா, மதுமிதா, ரிஷாபா்ஹானா ஆகியோா் முதல் 3 இடங்களை பெற்றனா். அந்த மாணவிகளுக்கு ஆனக்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் விமலா ஸ்டெல்லாபாய் பரிசு வழங்கினாா். குளச்சல் வட்டாரக் கல்வி அலுவலா் ஜெயசந்திரன் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், குருந்தன்கோடு வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் லாரன்ஸ், குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பிஷிஜாஸ்மின், ஆசிரியா்கள் ராபா்ட்பாபு, பிரேமலதா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி நசீராபீவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.