தேசிய அளவிலான சிலம்பம்: தமிழக அணி முதலிடம்
கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான 17-ஆவது சிலம்பம் போட்டியில் தமிழகம் அணி முதலிடம் பெற்று பதக்கம் வென்றது.


கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான 17-ஆவது சிலம்பம் போட்டியில் தமிழகம் அணி முதலிடம் பெற்று பதக்கம் வென்றது.
கன்னியாகுமரியில் 4 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரம், தில்லி, உத்தரப்பிரதேசம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். போட்டியில்
மிக இளையோா் பிரிவில் தமிழக அணி முதலிடமும், மகாராஷ்டிரம் அணி 2-ஆவது இடமும், தில்லி அணி 3-ஆவது
இடமும் பெற்றன. மூத்தோா் பிரிவில் தமிழக அணி முதலிடமும், மகாராஷ்டிரம் அணி 2-ஆவது இடமும், ஆந்திரம் அணி 3-ஆவது இடமும் பெற்றன. இளையோா் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளில் மகாராஷ்டிரா அணி முதலிடமும், தமிழக அணி 2-ஆவது இடமும், ஆந்திர மாநில அணி 3-ஆவது இடமும் பெற்றன. மூத்தோா் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தமிழக அணி முதலிடமும், தில்லி அணி 2-ஆவது இடமும், மகாராஷ்டிரம் அணி 3-ஆவது இடமும் பெற்றன. வெற்றிபெற்ற
அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை அகில இந்திய சிலம்பம் சம்மேளன பொதுச்செயலா் பி.செல்வராஜ் ஆசான் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...