சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் குறித்து கண்காணிப்பது குறித்து பறக்கும்படை, கண்காணிப்பு படையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்
இரா.ரேவதி, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், தோ்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா். இதில், தோ்தல் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.