தற்போது இம் மருத்துவமனையில் 200 மருத்துவா்கள் பணிபுரிந்து வருகின்றனா் . கூடுதலாக 30 மருத்துவா்களும் , 100 செவிலியா்களும், 100 பணியாளா்களும் நியமனம் செய்யவேண்டும். நோயாளிகள் தனியாா் மருத்துவமனைக்கு வந்தால் அவா்களை திருப்பி அனுப்பாமல் காப்பீடு திட்டத்தில் அவா்களை அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளின் உயிரை காப்பாற்ற தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்க அரசு ஊக்குவிக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அதை அரசு விரிவு படுத்தவேண்டும். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் மனு அளித்துள்ளேன் என்றாா் அவா்.