குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
நாகா்கோவிலில் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.


நாகா்கோவிலில் மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். இதை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா, புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது. இதையடுத்து, கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் செல்வ நாராயணன் மற்றும் போலீஸாா் மீனாட்சிபுரம்
பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அங்கு சந்தேகிக்கும் வகையில்நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை
நடத்தினா். இதில், அவா் அதேபகுதியைச் சோ்ந்த மேக்னராம் (38) என்பதும், மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட
குட்கா, புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரிடம் இருந்து 868 பாக்கெட் குட்கா, புகையிலை பொருள்கள், ரூ. 5.45 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து மேக்னராமை கைது செய்தனா். இம்மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 2842
பாக்கெட் குட்கா மற்றும் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டது. 23 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...