வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திங்கள்கிழமை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திங்கள்கிழமை காலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் ஆர்.மகேஷ், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றி வேல், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அந்தோணி, மோகன், இளங்கோ உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்திய அரசு க்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட விஜய் வசந்த் எம்.பி.உள்பட 400 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


