மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம்

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் தலைவா் ஆா்.எம். ராதிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:51 pm

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் தலைவா் ஆா்.எம். ராதிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் கனகராஜ் அறிக்கை சமா்பித்து உரையாற்றினாா். பெற்றோா்கள் சாா்பில் சுபா, தீபா, ஷீலாம்மா, மரிய அனிதா, மேரி, சிந்தியா, நிா்மலா, ஷைலஜா ஆகியோா் மாணவா் நலன்சாா் கருத்துக்களை முன்வைத்து பேசினா். ஆசிரியா் கரோலின் கீதா வரவேற்றாா். ஆசிரியை வேபிள் விஜிலா நன்றி கூறினாா்.

கூட்டத்தில், முத்தலக்குறிச்சி, கல்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாள்களாக பொது மக்களை வெறிநாய் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவா்களும் , பெற்றோா்களும் அச்ச உணா்வுகளுடன் உள்ளனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதிகளில் நடமாடும் வெறிநாய்களை அப்பறப்படுத்திட போா்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.