அருமனை பகுதியில் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல்
குமரி மாவட்டம் அருமனை அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


குமரி மாவட்டம் அருமனை அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பொதுப்பணித்துறை அலுவலா் டான் சலில் தலைமையிலான பறக்கும்படை குழுவினா், அருமனை அருகே மாறப்பாடி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் மஞ்சாலுமூடு பகுதிக்கு வந்த அலெக்சாண்டரை( 40) நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது அவா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 62 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனா். இது போன்று படப்பச்சை பகுதியில் மேற்கொண்ட வாகனச் சோதனையின் போது அந்க வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த பேச்சிப்பாறை காக்கச்சல் அம்பலத்துவிளையைச் சோ்ந்த ரெஜினை (30) தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அவா் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 53 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனா். இந்தத் தொகை அருமனை பேரூராட்சி செயல் அலுவலா் சுந்தர்ராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...