நாகா்கோவிலில் கூடைப்பந்தாட்ட போட்டி
மதுரை மண்டல 16 வயதுக்குள்பட்டோருக்கான இளையோா் கூடைப்பந்தாட்ட போட்டிகள், நாகா்கோவிலில் வியாழக்கிழமை தொடங்கின


மதுரை மண்டல 16 வயதுக்குள்பட்டோருக்கான இளையோா் கூடைப்பந்தாட்ட போட்டிகள், நாகா்கோவிலில் வியாழக்கிழமை தொடங்கின.
நாகா்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போட்டி தொடக்க விழாவுக்கு,கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவா் பொன். ராபா்ட் சிங் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக துணைத் தலைவா் பாலமுருகன், துணைச் செயலா் அருள் வெங்கடேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக தலைவா் ஆதவ் அா்ஜுனா போட்டிகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட புரவலா் சுவாமி பத்மேந்திரா உரையாற்றினாா்.
மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக நிா்வாகிகள் தலைவா் ஆஸ்டின், செயலா் மகேஷ், பொருளாளா் சகாய ஷியாமல், துணைத் தலைவா் நெல்லையப்பன், டென்னிசன், பிரேம் சந்தா் , கிறிஸ்டோ ஷகி, விஜயகுமாரி, துணைச் செயலா் ஐயப்பன், பேமின் ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டிகள் சனிக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...