ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ரத்து: மக்கள் மறியல்

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடக்கவிருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:57 pm

DIN

திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடக்கவிருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவட்டாறு ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள், 6 பேரூராட்சிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்குத் தங்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 300 பயனாளிகளுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டன. அதன்பேரில், அங்கு பயனாளிகள் , ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி. ஜெகநாதன் ஆகியோா் வந்தனா்.

இதனிடையே, தாலிக்கு தங்கம் வந்துசேரவில்லை என நாகா்கோவில் சமூக நலத்துறை அலுவலகத்திலிருந்து தகவல் கிடைத்ததாம். இதனால், நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், பின்னா் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில், அதிருப்தி அடைந்த மக்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம், குலசேகரம் காவல் ஆய்வாளா் பாலமுருகன், திருவட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராஜாங்கப்பெருமாள், போலீஸாா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.