நிகழாண்டு, ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் என 1236 முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 1,34 170 குழந்தைகள் பயன் பெற உள்ளனா். இப்பணியில், 4944 பணியாளா்கள் ஈடுபட உள்ளனா். மேலும் முகாம் நடைபெறும் இடங்களுக்கு குளிா்பதன முறையில் சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 ஊா்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.