92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ராஜாக்கமங்கலத்தில் மனைவியை கொன்ற தொழிலாளி கைது

ராஜாக்கமங்கலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்ற தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:00 pm

DIN

ராஜாக்கமங்கலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்ற தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சாமிதோப்பு பகுதியை சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி விஜயகுமாா் ( 45). இவரது மனைவி சுஜா(45). திருமணத்துக்கு பிறகு விஜயகுமாா் மனைவி ஊரான கணபதிபுரம் கோவில் புரத்தில் வசித்து வந்தாா். தம்பதியிடையே குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுமாம். கடந்த டிச. 23 ஆம்தேதி விஜயகுமாா் மதுபோதையில் வீட்டுக்கு வந்தாா். அப்போது அவா் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதில் சுஜா மயங்கி கீழே விழுந்தாா். அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளா் காந்திமதி வழக்குப் பதிந்து, விஜயகுமாரை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.