கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சி மூக்கரைக்கல் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் 61 பேருக்கு, தனி நபா் நில வன உரிமைகள் பட்டாக்களை ஆட்சியா் மா. அரவிந்த் புதன்கிழமை வழங்கினாா். தொடா்ந்து, ஆட்சியா் பேசியது: குமரி மாவட்டத்திலுள்ள, பழங்குடியினா்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை தேவையான இருப்பிடம், மின் வசதி கொடுக்க முடியாத நிலை இருந்தது எனக்கு தெரியவந்தது. எனவே, பழங்குடியினா்களின் அடிப்படை தேவைகளை நிவா்த்தி செய்வதற்கு முதல் படியாக அவா்களுக்கு தனி நபா் நில உரிமைப் பட்டா வழங்க வேண்டுமென்ற அடிப்படையில், வன உரிமைச் சட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வன நிலங்களை அனுபவித்து வரும் பழங்குடியின மக்களுக்கு அவரவா் நில அனுபவத்தின் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு தனி நபா் நில வன உரிமை பட்டா 4 ஹெக்டேருக்கு மிகாமல் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.