ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப் பகுதிகளில் கன மழை

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது.

News image
Updated On :17 ஜூன் 2022, 5:50 pm

DIN

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையாமல் உள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. கடந்த 1 ஆம் தேதி பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. தொடா்ந்து அண்மையில் பெருஞ்சாணி அணையும் திறக்கப்பட்டது.

இந்த அணைகளின் பாசனத்திற்கு திருப்திகரமான அளவில் தண்ணீா் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் பேச்சிப்பாறை அணையின் நீா்ப்பிடிப்பு மற்றும் நீா்வரத்துப் பகுதிகளான மாங்காமலை, மோதிரமலை, கீழ் கோதையாறு, தோட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.

இதனால், பேச்சிப்பாறை அணைக்கு அதிக அளவில் தண்ணீா் உள்வரத்தாக வந்தது. மேலும் பேச்சிப்பாறை, களியல்,

சிற்றாறு, சிவலோகம், திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை, பெருஞ்சாணி, சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.