ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரம் அருகே இளைஞா் தற்கொலை

குலசேகரம் அருகே திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:25 pm

DIN

குலசேகரம் அருகே திருமணம் செய்து கொண்ட 2 மாதத்தில் இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

செருப்பாலூா் இளமாங்கோட்டு விளை கேசவன் மகன் செந்தில்குமாா். மாா்த்தாண்டத்தில் பழக்கடை நடத்தி வந்த இவா் பள்ளியாடியை சோ்ந்த நா்சிங் மாணவி அபிஷாவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். திருமணத்துக்கு பின்னா் பழக்கடையை மூடியுள்ளாா். மது அருந்துபவரான இவா் திருமணத்திற்குப் பிறகும் மது அருந்தி வந்துள்ளாா்.

இதனால், அபிஷாவின் பெற்றோா் அவரை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்விட்டனராம். இந்நிலையில் செந்தில் குமாா் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இது குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.