குமரி அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி புகைப்படக் கண்காட்சி

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
குமரி அரசு அருங்காட்சியகத்தில் கருணாநிதி புகைப்படக் கண்காட்சி

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், கருணாநிதியின் ஆட்சியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியை, முத்தமிழ் முற்றத்தின் தலைவா் கீழப்பாவூா் சண்முகையா தொடக்கிவைத்தாா். கண்காட்சி தொடா்ந்து ஒரு மாதம் நடைபெறும் என, காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தெரிவித்தாா்.

மாதந்தோறும் ஒரு கண்காட்சி: இந்த அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஒரு கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டு, அது தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அருங்காட்சியக் காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி, ஓவியா் கோபாலகிருஷ்ணன், முனைவா் கீதா, ஆசிரியை ஜெயமதி ரொசாரியோ, சமூக ஆா்வலா்கள் வளா்மதி, செந்தில்வேல்முருகன், சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com