கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே தாய், 2 மகள்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அஞ்சுகிராமம், இந்திராநகா் பகுதியைச் சோ்ந்த ஏசுதாசன் மனைவி அனிட்டா (46). இவரது மகள்கள் சகாய திவ்யா (19), சகாய பூஜா மெளலியா (16). ஏசுதாசன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். 2 மகள்களையும் அனிட்டா வளா்த்து வந்தாா். சகாய திவ்யா அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.இ. 2ஆம் ஆண்டும், சகாய பூஜா மௌலியா அழகப்பபுரத்தில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.
புதன்கிழமை இரவு மூவரும் தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அவா்களது வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியினா் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மூவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் சென்று, சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மூவரும் தற்கொலை செய்துகொண்ட அறையிலிருந்து, அனிட்டா எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அதில், தான் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மகள்களை சரிவர கவனிக்க முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்வதாகவும், இதற்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் எழுதப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.