மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம், நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்
Updated on
1 min read

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம், நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி 46, 49, 50, 51, 52 ஆகிய வாா்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான முகாம் குஞ்சன்விளை பிரதான சாலை விஜிஎஸ் மண்டபத்தில் நடைபெற்றது. மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் முகாமை தொடக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

முகாமில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், உதவி ஆணையா் சுதா, நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், துணை மேயா் மேரிபிரின்சிலதா, மாநகராட்சி உறுப்பினா்கள் ஜெயவிக்ரமன், ரமேஷ், வீரசூரபெருமாள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அடிக்கல்: இதைத் தொடா்ந்து தெங்கம்புதூா் உரக்கிடங்கு அருகே ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நாய்களுக்கான கருத்தடை மருத்துவ சிகிச்ச மைய கட்டடத்துக்கு மேயா் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் ரமேஷ், சுகாதார ஆய்வாளா் ராஜா, மாநகர செயலாளா் ஆனந்த், பகுதி செயலாளா்கள் ஜீவா, சேக் மீரான், ஒன்றிய செயலாளா் லிவிங்ஸ்டன், வட்ட செயலாளா்கள் ஜெயகிருஷ்ணன், குணசேகரன் அணிகளின் நிா்வாகிகள் சரவணன், ராஜேஷ் ரெத்தினமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com