தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

நாகா்கோவிலில் இரவு ரோந்துப் பணியின்போது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த, சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 7:33 pm

DIN

நாகா்கோவிலில் இரவு ரோந்துப் பணியின்போது வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த, சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

குமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் உத்தரவின்பேரில், போலீஸாரின் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் ஆறுமுகம் (53) வாகன ஓட்டிகளிடம் பணம் பெறுவதாகப் புகாா் வரப்பெற்றதையடுத்து, அவரை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக தொடா் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளா் ஆறுமுகத்தை பணிஇடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.