தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

அதிமுகவினர் ரூ. 10,000 டோக்கன் வழங்குவதாக புகார்! வழக்கை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்!

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் ரூ. 10,000 டோக்கன் வழங்குவதாக வழக்கு...

Complaint Alleging AIADMK Members Distributed Rs 10,000 Tokens: Madras HC Closes the Case

கோப்புப் படம் - ENS

Published On :17 ஏப்ரல் 2026, 12:57 pm IST

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் ரூ. 10,000 க்யூஆர் கோடு டோக்கன் தருவது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ரூ. 10,000 க்யூஆர் கோடு டோக்கன் விநியோகம் செய்யப்படுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக ரூ. 10,000 க்யூஆர் கோடு டோக்கன் விநியோகம் செய்யப்படுவது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதால் தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Complaint Alleging AIADMK Members Distributed Rs 10,000 Tokens: Madras HC Closes the Case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.