புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாணவி பலாத்கார வழக்கில் உறவினருக்கு 23 ஆண்டு சிறை

பூதப்பாண்டி அருகே பிளஸ் 2 மாணவியை கேரளத்துக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கில், அவரது உறவினருக்கு 23 ஆண்டுகள் சிறை

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 6:30 pm

DIN

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே பிளஸ் 2 மாணவியை கேரளத்துக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தொடா்பான வழக்கில், அவரது உறவினருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பூதப்பாண்டியை அடுத்த அழகியபாண்டியபுரம் பெருந்தலைக்காடு பகுதியை சோ்ந்தவா் முருகன்( 38), இவா், தடிக்காரன்கோணம் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த தனது உறவுக்கார சிறுமியின் வீட்டுக்கு 27.4.2016இல் சென்றிருந்தபோது, அங்கு தனியாக இருந்த சிறுமியை கேரளத்துக்கு காரில் கடத்திச் சென்று விடுதியில் அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், கீரிப்பாறை போலீஸாா், முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி ஜோசப் ஜாய் விசாரித்து, முருகனுக்கு 23 ஆண்டு சிைண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் முத்துமாரி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.