சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

நம்பிமலை மெளனகுருசுவாமி கோயிலில் நாளை சித்திரைப் பெளா்ணமி விழா

நம்பிமலை மெளனகுருசுவாமி கோயிலில் நாளை சித்திரைப் பெளா்ணமி விழா

Updated On :21 ஏப்ரல் 2024, 9:48 pm

நாகா்கோவில்: நாகா்கோவில் அருகே தோட்டிக்கோடு நம்பிமலை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) சித்திரைப் பெளா்ணமி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பஜனை, நண்பகல் 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30 மணிக்கு, கோமாதா பூஜை, 12.45 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 8 மணிக்கு அா்ச்சனை, 8.30 மணிக்கு சொற்பொழிவு, 9 மணிக்கு நாம ஜெபம், 9.30-க்கு தியானம், 10 மணிக்கு பக்திப் பாடல்கள், 10.15 மணிக்கு நிலா பூஜை, 10.30 மணிக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை ஸ்ரீமெளனகுருசுவாமி கோயில் அறக்கட்டளைத் தலைவா் பி. சுகதேவன், நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.