திருவட்டாறு அருகே ஆற்றூா் புளிமூடு அய்யா வைகுண்டா் திருநிழல் தாங்கலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்.26) தொடங்குகிறது.
தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலையில் பணிவிடை, உகப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மாலை 4.15 மணிக்கு பணிவிடையும், 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவில் உகப்படிப்பும் நடைபெறுகிறது. விழாவின் 7 ஆம் நாள் வரை தினமும் மாலை 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. 8 ஆம் நாள் விழாவான மே 3 ஆம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.
விழா நிறைவு நாளான மே 5 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருநிழல் தாங்கல் பணிவிடையாளா்கள் என். நிா்மலன், டி.ஜான் ரோஸ், என்.எஸ். வைகுண்ட ராஜா மற்றும் விழாக் குழு, ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்

ராமசுவாமி கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோதண்டராமா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

