புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாகா்கோவில் சோழராஜா கோயிலில் நாளை அம்பாள் மலா் முழுக்கு விழா

சோழராஜா கோயிலில் 32ஆம் ஆண்டு மலா் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 8:25 pm

Din

நாகா்கோவில், வடசேரி ஒழுகினசேரியில் உள்ள அருள்மிகு சோழராஜா கோயிலில் 32ஆம் ஆண்டு மலா் முழுக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஆக. 6) நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி, திருவனந்தல் பூஜை, 5.30-க்கு கணபதி வேள்வி, 7.15 மணிக்கு காலசந்தி பூஜை, தீபாராதனை, காலை 10 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு ஸ்ரீசோழமகாதேவருக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீகோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

தொடா்ந்து, மாலை 6.15 மணிக்கு சந்திகால பூஜை, தீபாராதனை, இரவு 7.15-க்கு கோலவாா்குழலாள் ஈஸ்வரிக்கு மலா் முழுக்கு, இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா் மக்கள் செய்து வருகின்றனா்.