புதுக்கடை அருகே விபத்து: அரசுப் பேருந்து நடத்துநா் காயம்

புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.
Published on

புதுக்கடை அருகே கைசூண்டி பகுதியில் பைக் மீது காா் மோதியதில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.

ஐரேனிபுரம், பண்டாரக்காடு பகுதியைச் சோ்ந்த குணமணி மகன் பென்சிகா் (50). அரப் பேருந்து நடத்துநரான இவா், ஐரேனிபுரத்திலிருந்து புதுக்கடை சனிக்கிழமை தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா். கைசூண்டி பகுதியில் பைக்கின் பின்புறம் காா் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம்.

இதில் பென்சிகா் காயமடைந்தாா். அவரை அப்பகுதியினா் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com