விபத்தில் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே சாலை விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ஆம்பூா் அருகே சாலை விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (42). இவா் அரசுப் பேருந்து நடத்துநராக வேலை செய்து வந்தாா். வாணியம்பாடி பகுதியில் இருந்து ஆம்பூா் நோக்கி தனது மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

ஆம்பூா் அடுத்த விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காா்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா், சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Dinamani
www.dinamani.com