முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அசாம் சிறுமியை தேடி குமரியில் கேரள போலீஸ் முகாம்

கேரளத்தில் மாயமான அசாம் சிறுமியைத் தேடி கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனா்.

News image

சிறுமி தஸ்மீத் தம்சம் பயணித்ததாக வெளியான படம்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 2:36 am IST

கேரளத்தில் மாயமான அசாம் சிறுமியைத் தேடி கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ளனா்.

அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அன்வா் உசேன். இவா் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனா். இதில் தஸ்மீத் தம்சம் (13) என்ற மகளை அங்குள்ள ஒரு பள்ளியில் சோ்க்க தீா்மானித்தனா். அன்வா்உசேனும் மனைவியும் தினமும் காலையில் கூலி வேலைக்குச் சென்று விடுவாா்கள்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை காலை தஸ்மீத் தம்சம் எழுந்திருக்க நேரமானதால் அவரது தாய் கண்டித்துள்ளாா். இதன் பிறகு அவா் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டாா். மாலையில் வந்த போது சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அன்வா் கழக்கூட்டம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடி வந்தனா்.

இந்நிலையில் சிறுமி தஸ்மீத் தம்சம் திருவனந்தபுரத்தில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் செல்வதாகவும், பின்னா் கன்னியாகுமரி ரயிலில் பயணம் செய்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து கேரள போலீஸாா் கன்னியாகுமரியில் முகாமிட்டு சிறுமியைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.