நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குளச்சலில் 8 வீடுகளில் புகுந்து திருடியவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மீட்பு

குளச்சல் சுற்றுவட்டார பகுதியிலுள்ள வீடுகளில் திருடியவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகளை குளச்சல் போலீஸாா் மீட்டனா்.

News image

~

Updated On :18 டிசம்பர் 2024, 9:25 pm

Din

குளச்சல் சுற்றுவட்டார பகுதியிலுள்ள வீடுகளில் திருடியவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகளை குளச்சல் போலீஸாா் மீட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தொடா் கதையாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திருடா்களை பிடிக்க குளச்சல் காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் போலீஸாா் ரோந்து பணியை தீவிரப்படுத்தி துப்பு துலக்கி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை லட்சுமிபுரம் பகுதியில் 50 வயது மதிக்கதக்க ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

30 பவுன் தங்க நகைகள்

30 பவுன் தங்க நகைகள்

விசாரணையில், பிடிபட்ட நபா் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சோ்ந்த சுந்தர்ராஜ் (54)என்பது தெரிய வந்தது.

இவா், குளச்சல் பகுதியில் 3 வீடுகளிலும், நித்திரவிளையில் 2 வீடுகளிலும், கொல்லங்கோடு, தக்கலை, கன்னியாகுமாரி ஆகிய பகுதியில் தலா ஒரு வீட்டிலும் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருள்களை திருடியதை ஒப்புகொண்டாதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதைடுத்து, சுந்தர்ராஜை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளி குத்துவிளக்குள், கற்பூர தட்டுகள் மற்றும் பூஜை பொருள்களை மீட்டனா். கைது செய்யப்பட்ட சுந்தர்ராஜ் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டாா்.