கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாராஜபுரத்தில் பொதுமக்களுக்கு பட்டா அளிப்பு

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம் ஊராட்சியில் 5 பயனாளிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
பொதுமக்களுக்கு பட்டா வழங்குகிறாா் அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கண்ணன்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகாராஜபுரம் ஊராட்சியில் 5 பயனாளிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட புதுக்குளம் பகுதி மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் பகுதியாகும். இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் 5 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு மகாராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கே.இசக்கிமுத்து தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் வட்டாட்சியா் கண்ணன் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினாா்.

இதில் வாா்டு உறுப்பினா் சுயம்பு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.