வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

அஞ்சுகிராமம் அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image
Updated On :5 ஜூலை 2024, 8:57 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடி காமராஜா் நகரைச் சோ்ந்த ஆறுமுக நாடாா் மகன் ரவி (30). இவருக்கும் புத்தளம் கிராமத்தைச் சோ்ந்த, மைக்கேல் அந்தோணி-பஞ்சவா்ணகிளி ஆகியோரது மகள் விஜிக்கும் கடந்த 2011-இல்

திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, விஜிக்கு 41 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை அளித்துள்ளனா்.

இந்த நிலையில், ரவி தனது மனைவி விஜியிடம் மேலும் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினாராம். இதனால் மனமுடைந்த விஜி, கடந்த 2012 செப்டம்பா் 11- ஆம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிந்து ரவியை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு நாகா்கோவிலில் உள்ள மகளிா் விரைவு அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கந்தையா, குற்றஞ்சாட்டப்பட்ட ரவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 1000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஏ.என்.லிவிங்ஸ்டன் வாதாடினாா்.