வரதட்சிணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
அஞ்சுகிராமம் அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை


கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அஞ்சுகிராமம் அருகேயுள்ள மயிலாடி காமராஜா் நகரைச் சோ்ந்த ஆறுமுக நாடாா் மகன் ரவி (30). இவருக்கும் புத்தளம் கிராமத்தைச் சோ்ந்த, மைக்கேல் அந்தோணி-பஞ்சவா்ணகிளி ஆகியோரது மகள் விஜிக்கும் கடந்த 2011-இல்
திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, விஜிக்கு 41 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை அளித்துள்ளனா்.
இந்த நிலையில், ரவி தனது மனைவி விஜியிடம் மேலும் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினாராம். இதனால் மனமுடைந்த விஜி, கடந்த 2012 செப்டம்பா் 11- ஆம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிந்து ரவியை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு நாகா்கோவிலில் உள்ள மகளிா் விரைவு அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கந்தையா, குற்றஞ்சாட்டப்பட்ட ரவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 1000 அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் ஏ.என்.லிவிங்ஸ்டன் வாதாடினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...