விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வரதட்சிணை கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டிவனம் சலவாதி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சேகா். இவரது மகள் மோனிஷா (24). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்த விநாயகம் மகன் சிரஞ்சிவிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தையில்லை.
சிரஞ்சிவி சிங்கப்பெருமாள்கோயிலில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா். நெடுங்கல் கிராமத்தில் கணவா் வீட்டில் இருந்து வந்த மோனிஷாவிடம் மாமனாா் விநாகயம், மாமியாா் காஞ்சனா மற்றும் சிரஞ்சீவி ஆகியோா் ரூ. ஒரு லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டனராம்.
இதனால், திண்டிவனம் சலவாதியில் உள்ள பெற்றோா் வீட்டில் வந்து தங்கியிருந்த மோனிஷா புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை
வரதட்சணை கொடுமை: கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


