ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:19 am

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு, தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். லாரி ஓட்டுநா். இவரது மனைவி ஜெயந்தி(46). இவா்களது மகள்களான ஹா்ஷனி(10), கயல்(8) ஆகிய இருவரும் கடந்த 14 -ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவுக்கு சென்றபோது, அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆழ்ந்த சோகத்தில் இருந்து வந்த ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.