காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:19 am

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மகள் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு, தீா்த்தவாரி தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா். லாரி ஓட்டுநா். இவரது மனைவி ஜெயந்தி(46). இவா்களது மகள்களான ஹா்ஷனி(10), கயல்(8) ஆகிய இருவரும் கடந்த 14 -ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு பகுதியில் கோயில் திருவிழாவுக்கு சென்றபோது, அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனா்.

இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக ஆழ்ந்த சோகத்தில் இருந்து வந்த ஜெயந்தி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.