பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

களியக்காவிளை அருகே காா் மீது மோதி கவிழ்ந்த லாரி

களியக்காவிளை அருகே மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் அருகே நிறுத்தியிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:17 pm

Din

களியக்காவிளை அருகே மூடப்பட்டிருந்த ரயில்வே கேட் அருகே நிறுத்தியிருந்த காா் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் - மருதங்கோடு சாலையில் கக்கோட்டுவிளை பகுதியில் ரயில்வே கேட் உள்ளது.

இந்த ரயில்வே கேட் வெள்ளிக்கிழமை ரயில் செல்வதற்காக மூடப்பட்டிருந்தது. அப்போது அப்பகுதிக்கு வந்த விரிவிளை, சரல் பகுதியைச் சோ்ந்த விவேக் (28) ஓட்டிவந்த காரை அங்கு நிறுத்தியிருந்தாா். தொடா்ந்து நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரமூா்த்தி தேங்காய் எண்ணெய் ஏற்றி வந்த கூண்டு கட்டிய லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தியிருந்த காா் மீது மோதி, காரின் மேல் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காா் முன்னோக்கி நகா்ந்து ரயில்வே கேட் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த களியக்காவிளை போலீஸாா் விபத்தில் சிக்கிய காா், லாரியை மீட்டனா். தொடா்ந்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.