திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாா்த்தாண்டம் அருகே திருட்டு வழக்கில் இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:09 pm

Din

களியக்காவிளை, ஜூலை 19: மாா்த்தாண்டம் அருகே திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகுந்த மா்ம நபா், அங்கிருந்த கணினி, ரூ. 7,500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றாா். இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்டது திருவட்டாறு அருகேயுள்ள தச்சூா் ஏற்றத்துவிளையைச் சோ்ந்த சாா்லஸ் மகன் சனில்குமாா் (27) என்பது தெரியவந்தது. அவரை மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.