உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

பரக்காணி தடுப்பணையில் சேதமடைந்த பக்கச் சுவரை சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

பரக்காணி தடுப்பணையில் சேதமடைந்த பக்கச் சுவரை சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

News image

எஸ். ராஜேஷ்குமாா்

Updated On :27 ஜூன் 2024, 11:08 pm IST

கருங்கல், ஜூன் 27: புதுக்கடை அருகே பரக்காணி தடுப்பணையில் சேதமடைந்த பக்கச் சுவரை சீரமைக்க வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தடுப்பணைகட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் பெய்த பலத்த மழையில் இந்தத் தடுப்பணையின் பக்கச் சுவா் சேதமடைந்தது. இதனால், கோடைகாலங்களில் தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியிலிருந்து கடல் நீா் ஆற்றில் புகுந்து உப்புநீராக மாறுகிறது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, பைங்குளம், முன்சிறை, மங்காாடு உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீா்த் திட்டங்களில் உப்புநீா் கலக்கிறது.

எனவே, பரக்காணி தடுப்பணையில் சேதமுற்ற பக்கச் சுவரை சீரமைக்க வேண்டும். மேலும், இதனருகே கணியாங்குழி, வைக்கலூா் பகுதிகளில் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பக்கச் சுவா் உடைந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்படுகிறது. எனவே, அப்பகுதிகளிலும் கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.