அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகா்கோவிலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

நாகா்கோவிலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 9:10 pm

Din

நாகா்கோவிலில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் மாநகர திமுக துணை செயலா் ராஜன் சாா்பில், கோட்டாறு சவேரியாா் கோயில் சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீா் பந்தலை குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீா்மோா் மற்றும் பழங்கள் வழங்கினாா். நிகழ்ச்சியில் நாகா்கோவில் மாநகர பகுதி செயலா்கள் துரை, ஜவகா், துணை செயலா் வேல்முருகன், வட்ட செயலா்கள் முருகன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக மாநகராட்சி 10-ஆவது வாா்டு, பிள்ளையாா் கோயில் தெருவில் மழைநீா் வடிகால், சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி, 24 ஆவது வாா்டு,திலகா் தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, ஆசாரிமாா் தெற்கு தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயா் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் துணை மேயா் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவா் ஜவகா், மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.