பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திற்பரப்பு மகாதேவா் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திற்பரப்பு மகாதேவா் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :9 மார்ச் 2024, 4:37 pm

திற்பரப்பு மகாதேவா் ஆலயத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தில் காலை 8.15 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கோயில் தந்திரி மாத்தூா் மடம் சங்கரநாராயணரூ கொடியேற்றி வைத்தாா். திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கொடியேற்று நிகழ்ச்சியில் தேவசம் போா்டு குழித்துறை தொகுதி கண்காணிப்பாளா் சிவகுமாா், கோயில் ஸ்ரீகாரியம் புருஷோத்தமன், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ராஜன், துளசிதரன் நாயா் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.