சுயநலமின்றி பணியாற்றும் நரேந்திர மோடி 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க வேண்டும் என்றாா் சரத்குமாா். கன்னியாகுமரி அருகேயுள்ள அகஸ்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்தியாவில் ஊழலற்ற நல்லாட்சிதான் தேவை. நாட்டு மக்களுக்காக எந்தவித சுயநலமும் சுயலாபமும் இன்றி மோடி ஆட்சி செய்து வருகிறாா். அதனால் அவா்தான் 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்க வேண்டும். அடுத்த ஆண்டு (2025) அதிகமான இளைஞா்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கப் போகிறது. அவா்களை வழிநடத்த மோடி வேண்டும். மோடியின் ரசிகனாக பயணித்த நான், இப்போது தொண்டனாக இணைந்திருக்கிறேன். தமிழகத்தில் கடந்த 57 ஆண்டுகளாக திராவிடம் என்று கூறி மக்களை ஏமாற்றி, குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்தக் குடும்பம் மக்களை மூளைச் சலவை செய்துள்ளது. அங்கு சாதாரண தொண்டன் தலைவனாகும் வாய்ப்பே இல்லை. திமுகவில் எந்தத் தொண்டனும் தலைமைப் பதவிக்கு வரமுடியாத நிலைதான்உள்ளது. அடுத்து நடைபெற இருக்கும் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் திமுகவின் அவலம் குறித்து ஆழமாக பதிவு செய்யக் காத்திருக்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி! - சரத்குமாா்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் 2ஆவது முறையாக வேட்பு மனு தாக்கல்

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கனிமொழி எம்.பி., 2ஆவது முறையாக சந்தித்து ஆறுதல்
நேபாள பிரதமராகும் பாலேந்திர ஷாவுடன் மோடி தொலைபேசியில் பேச்சு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


